என்ன பெயர் வைக்கலாம் – ஒரு குறிப்பு
“தம்பி – உன் தகப்பனார் மாமல்லபுரத்தில் ரொட்டிக் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்”
பையன் சிறிது ஏளனத்துடன் “போன வாரந்தான் அவர் செத்துப் போயிட்டாரே ஐயா” என்று சொல்லவும், அவர் “தெரியாது தம்பி – உன் தகப்பனார் மாமல்லபுரத்தில் ரொட்டிக் கடை வைத்திருக்கிறார் – இப்போதும் இருக்கிறார் – அது தெரிகிறது” என்றார்.”
தீராநதி இதழில் மேற்படி தலைப்பில் வந்த கதையைப் பற்றி நண்பர் பட்சிராஜன் கூறுகையில் இம்மாதிரி டெலிபதி பற்றிய விசயங்கள் எல்லா ஆசிய நாடுகளிலும் குறிப்பாக ஜப்பான் – சீனா போன்றவற்றிலும் சொல்லப்படுகிறது என்று தெரிவித்தார்.
மறைமலை அடிகளாரின் “தொலைவிலுணர்தல்” புத்தகத்தைப் பற்றி சென்னை நகராண்மைக் கழக அலுவலகத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அடிகளாரின் புதல்வர் மறை. திருநாவுக்கரசு அவர்கள் இம்மாதிரி விசயம் பற்றி அடிகளாரும் தெரிவித்திருக்கிறார் என்றார். மறை. திருநாவுக்கரசு அவர்கள் நகராண்மைக் கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.
அந்தக் காலத்தில் – சென்ற நூற்றாண்டின் மத்தியில் – இம்மாதிரி டெலிபதி விசயம் எல்லாருக்கும் புதிதுதான். இங்கேயும் கதைகள் இருந்திருக்கின்றன.
